Saturday, August 21, 2021

Quiz 17 ஒலிம்பிக்

 





ஒலிம்பிக் தோன்றிய வரலாறு


உலகின் மாபெரும் விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி, 2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது என்றால் நம்ப முடிகிறதா?


ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வாழ்நாள் கனவு. 200க்கும் மேற்பட்ட நாடுகள், ஆயிரக்கணக்கான வீரர்கள் என உலக நாடுகளை ஒரு குடையின் கீழ் இணைக்கும் ஒலிம்பிக் போட்டி தோன்றியது கி.மு.776ல்.


ஐரோப்பியாவில் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக விளங்கியது பண்டைய கிரேக்கப் பேரரசு. அங்கு வாழ்ந்த மக்கள் சமயங்களையும் அது சார்ந்த சடங்குகளையும் பின்பற்றும் வழக்கம் கொண்டவர்களாக இருந்தனர். கிரேக்க கடவுள்களின் கடவுளாக கருதப்படும் ‘ஜீயஸ்’ பெருமையை பறைசாற்றும் விழாவாக தொடங்கியது தான் ஒலிம்பிக் போட்டி.


கிறிஸ்து பிறப்பதற்கு 776 ஆண்டுகளுக்கு முன்பு, ஒலிம்பியா என்ற இடத்தில் தொடங்கிய முதலாவது போட்டி, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டது. போருக்கு தயாராக உதவக்கூடிய ஓட்டப்பந்தயம், குத்துச்சண்டை, மல்யுத்தம், ஈட்டி எறிதல், குதிரையேற்றம் உள்ளிட்ட போட்டிகளே இடம்பெற்றன. இதில் வெற்றி வாகை சூடியவர்களுக்கு ஆலிவ் இலையால் ஆன கிரீடம் சூட்டப்பட்டது.


பண்டைய ஒலிம்பிக் போட்டியில் கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். பெண்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதோடு, போட்டியைக் காணவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.



கிரேக்கர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்த ஒலிம்பிக் போட்டி கிபி 3ம் நூற்றாண்டில் ரோமானியர்களின் படையெடுப்பால் பொலிவிழந்தது. ஆயிரத்து 169 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டிக்கு தடை விதித்து உத்தரவிட்டார் இரண்டாம் தியோடோசியஸ் என்ற ரோமானிய அரசர். அதற்கு அவர் கூறிய காரணம் ”விளையாட்டு என்பது மதநம்பிக்கை அற்றவர்களின் கலாச்சாரம்” என்று.


தியோடோசியஸ் அதோடு நின்றுவிடாமல் ஒலிம்பிக் நடைபெற்ற மைதானங்களையும், ஜீயஸ் கடவுளின் கோயிலையும் இடித்து தரைமட்டமாக்கினார் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றாக உள்ளது.


உலகின் நினைவில் இருந்து ஒலிம்பிக்கிற்கு ஆயிரத்து 400 வருடங்களுக்கு பிறகு புத்துயிர் ஊட்டினார் பாரோன் பியரே டி கூபர்ட்டின். பிரான்ஸ் நாட்டு வரலாற்று ஆய்வாளரும், கல்வியாளருமான கூபர்ட்டின், தனது இடைவிடாத முயற்சியால் பல நாட்டு பிரதிநிதிகளை ஒன்று திரட்டி 1894-ம் ஆண்டில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை உருவாக்கினார்.


நவீன ஒலிம்பிக்கின் தந்தை என அழைக்கப்படும் கூபர்ட்டின், ஒலிம்பிக்கின் தாயகமான கிரீஸ் நாட்டிலேயே முதலாவது ஒலிம்பிக்கை நடத்த முடிவு செய்தார். அதன்படி, 1896ஆம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி ஏதென்ஸ் நகரில், முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக தொடங்கியது.




Friday, August 20, 2021

Proper & Common Noun | Weekend Quiz Series for Students

 Weekend Quiz SERIES

WEEK 9 -  QUIZ 16 

QUIZ CONTENT - PROPER NOUNS AND COMMON NOUNS

CLICK HERE TO WATCH THE QUIZ VIDEO CONTENT

https://youtu.be/b-pkVh-ns8w

Saturday, August 14, 2021

Tamilnadu Freedom Fighters | Weekend quiz on independence day

 


WEEKEND QUIZ SERIES.....

Week - 8 | Quiz - 15 

Tamilnadu freedom fighters - Content video for quiz

Click below to view the video content

https://youtu.be/hQIoDbrHA6s

Friday, August 13, 2021

Week 7 quiz 14 இந்தியா



இந்தியா


இந்தியா (India), அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India) தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியைத் தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது. இந்தியப் பெருநிலம் தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாகிஸ்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன. இலங்கை, மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் இந்தியப் பெருங்கடலில் இந்தியப் பெருநிலம், மற்றும் இலட்சத்தீவுகளுக்கு அண்மையில் அமைந்துள்ளன. இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாய்லாந்து, இந்தோனேசியாவின் சுமாத்திரா ஆகியவற்றுடன் அந்தமான் கடலில் கடல் எல்லையைக் கொண்டுள்ளன.

இந்தியக் குடியரசு

கொடி  - மூவர்ணக்கொடி
Emblem  -அசோகச்சக்கரம்
குறிக்கோள்: 
"சத்யமேவ ஜெயதே" (சமசுகிருதம்)
   "வாய்மையே வெல்லும்"
நாட்டுப்பண்: 
ஜன கண மனநாட்டுப் பாடல்: வந்தே மாதரம்
வந்தே மாதரம்

தலைநகரம் - புது தில்லி
28°36.8′N 77°12.5′E
பெரிய நகர் - மும்பை

ஆட்சி மொழி(கள்)

இந்தி, ஆங்கிலம்

மக்கள் - இந்தியர் 
அரசாங்கம் -நாடாளுமன்ற குடியரசு

குடியரசுத் தலைவர்- ராம் நாத் கோவிந்த் 
குடியரசுத் துணைத் தலைவர்- வெங்கையாநாயுடு 
பிரதமர் - நரேந்திர மோதி (பா.ஜ.க) 
 



பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நூற்று இருபத்தியொரு கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது.

பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. உலகின் பண்டைய நாகரிகங்களில் இந்தியாவும் ஒன்று ஆகும். சிந்து சமவெளி நாகரிகம் அல்லது ஹரப்பா-மொகஞ்சதாரோ என்று அழைக்கப்படும் நாகரிகம் இங்கு தோன்றியது ஆகும்.

இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு தலைமை மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின. பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளினால் கைப்பற்றப்பட்டு, 1947, ஆகத்து 15 அன்று விடுதலை பெற்றது. பின்னர் 1950, சனவரி 26 அன்று குடியரசாக அறிவிக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது.

31 அக்டோபர் 2019 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் ஆணையின் பேரில் இந்தியாவின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டது.

ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி (மூன்றாம் பதிப்பு 2009) படி, "இந்தியா" என்ற பெயர் பாரம்பரிய லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது, இது தெற்காசியாவைக் குறிக்கும் மற்றும் அதன் கிழக்கே ஒரு நிச்சயமற்ற பகுதியாகும்; இதிலிருந்து அடுத்தடுத்து பெறப்பட்டது: ஹெலனிஸ்டிக் கிரேக்க மொழியில் இந்தியா (α); பண்டைய கிரேக்க மொழியில் இந்தோஸ் (Ἰνδός); பழைய பாரசீக மொழியில் இந்துஷ், அகாமனிசியப் பேரரசின் கிழக்கு மாகாணம்; இறுதியில் இதன் அறிவாற்றல், சமஸ்கிருத மொழியில் சிந்து, அல்லது "நதி", குறிப்பாக சிந்து நதி மற்றும் இதன் மூலம், நன்கு குடியேறிய தெற்குப் படுகையை குறிப்பதாகும். பண்டைய கிரேக்கர்கள் இந்தியர்களை இந்தோய் (Ἰνδοί) என்று குறிப்பிட்டனர், இது "சிந்து மக்கள்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா நோக்கி படையெடுத்த வந்த மன்னர்கள், வர்த்தகர்கள் பலரும் வழியில் சிந்து நதியை கடந்து வரவேண்டியிருந்தது. சிந்து நதியை கடந்தால்தான் இந்திய நிலப்பரப்பில் கால்பதிக்க முடியும். அதனால், சிந்து நதியை அடுத்ததாக, சிந்து நதிக்கு மறுகரையில் உள்ள நாடு என, மேற்கத்திய நாடுகள் வர்ணிக்க தொடங்க, அது படிப்படியாக, சிந்து என்பது இந்து, இந்துஸ்தான், இந்தியா என உருமாற்றம் பெற்றது.

இந்துஸ்தான்   என்பது இந்தியாவிற்கான ஒரு மத்திய பாரசீக பெயர், இது முகலாயப் பேரரசின் போது அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் பின்னர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

Friday, August 6, 2021

WEEKEND QUIZ | WEEK 7 | QUIZ 13 | AUG. MONTH IMP. DAYS ON 2021

 #WEEKEND QUIZ

#WEEK 7

#QUIZ 13

#QUIZ CONTENT - AUGUST MONTH IMPORTANT DAYS ON 2021

Click here to watch the quiz content video

https://youtu.be/gANq0gLsRwo



Sci quiz

Science Lesson - 1 ...